இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் விவசாயிகளைச் சந்திக்க போராடும் விவசாயிகள் முடிவு

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாயிகளைச் சந்திக்க முடிவெடுத்துள்ளதாக பாரதிய விவசாய சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image
போராட்டத்தின்போது ரத்த தானம் செய்த ராகேஷ் டிக்கைட்
Updated On :21 டிசம்பர் 2020, 3:55 pm

DIN


வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாயிகளைச் சந்திக்க முடிவெடுத்துள்ளதாக பாரதிய விவசாய சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் தெரிவித்தது:

"மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாயிகளைச் சந்திக்கவுள்ளோம். இந்த சட்டங்கள் மூலம் அவர்கள் எவ்வாறு பலனடைகிறார்கள் என்பது பற்றியும், பயிர்களை விற்க அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்தும் தெரிந்துகொள்வோம்."

இதையடுத்து, பாரதிய விவசாய சங்கத்தின் செயலாளர் பல்வாந்த் சிங் தெரிவித்தது:

"ஒருவர் மாற்றி ஒருவர் என ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் 11 விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வார்கள். இதற்கான விவசாயிகள் பட்டியலும் தயாரிக்கப்பட்டுவிட்டது."

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 26 முதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு மற்றும் விவசாயிகளுக்கிடையிலான பலகட்ட பேச்சுவார்த்தைகளில் இதுவரை முடிவுகள் எட்டப்படவில்லை. இதற்கிடையே பல்வேறு விவசாயக் குழுவினர் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரைச் சந்தித்து சட்டங்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.