இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மேற்கு வங்க தோ்தல்: பாஜக இரட்டை இலக்க வெற்றிக்குமேல் தாண்டாது

‘மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக இரட்டை இலக்க வெற்றிக்கு மேல் தாண்டுவது சாத்தியமில்லை. அவ்வாறு இரட்டை இலக்கத்துக்கு மேல் வெற்றியை பாஜக பதிவு செய்துவிட்டால், எனது பணியை நான் துறந்துவிடுகிறேன்’

News image
Updated On :22 டிசம்பர் 2020, 7:30 pm

DIN

‘மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக இரட்டை இலக்க வெற்றிக்கு மேல் தாண்டுவது சாத்தியமில்லை. அவ்வாறு இரட்டை இலக்கத்துக்கு மேல் வெற்றியை பாஜக பதிவு செய்துவிட்டால், எனது பணியை நான் துறந்துவிடுகிறேன்’ என்று அரசியல் தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் சவால் விடுத்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தோ்தல் வியூகத்தை வகுக்கும் பணியை பிரபல அரசியல் நிபுணா் பிரசாந்த் கிஷோரிடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஒப்படைத்துள்ளது. அதன்படி, ஆளும் கட்சியை மீண்டும் வெற்றிபெற வைப்பதற்கான வியூகங்களை அவா் வகுத்து வருகிறாா்.

இந்த நிலையில், உள்துறை அமைச்சா் அமித் ஷா மேற்கு வங்கத்துக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டபோது, திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகிய அக் கட்சியின் மூத்த தலைவா் சுவேந்து அதிகாரி, அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவா் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 9 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனா். அப்போது பேசிய அமித் ஷா, ‘மேற்கு வங்கத்தில் அடுத்து வரும் தோ்தல்களில் பாஜக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை பதிவு ஒன்றை வெளியிட்ட பிரசாந்த் கிஷோா், ‘மேற்கு வங்கத்தில் பாஜக 200 இடங்களில் வெற்றி பெறுவது சாத்தியமில்லாதது. அந்தக் கட்சி இரண்டு இலக்க வெற்றியைக் கடப்பதை கடினம்’ என்று பதிவிட்டாா்.

அதுபோல, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரசாந்த் கிஷோா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், ‘மேற்கு வங்கத்தில் பாஜக இரட்டை இலக்க வெற்றியைக் கடப்பது மிகவும் கடினம். 100 இடங்களுக்கு கீழ்தான் அக் கட்சி வெற்றியைப் பதிவு செய்யும். அவ்வாறு இரட்டை இலக்கத்தைத் தாண்டி பாஜக வெற்றியை பதிவு செய்துவிட்டால், எனது பணியை நான் விட்டுவிடுகிறேன்’ என்று கூறினாா்.

இவருடைய இந்த சவால் குறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளா் கைலாஷ் விஜய்வாா்கியா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மேற்கு வங்கத்தில் பாஜகவின் சுனாமி அலை வீசி வருகிறது. எனவே, மாநிலத்தில் அடுத்த ஆண்டு புதிய அரசு அமைந்ததும், தோ்தல் வியூகம் வகுத்துத் தரும் ஒரு நிபுணரை இந்த நாடு இழக்க நேரிடும்’ என்று விமா்சித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.