ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த நாள்: விதிகளை மீறி கட்சியினர் ஊர்வலம்
திருப்பதியில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பொது முடக்க விதிமுறைகளை மீறி ஊர்வலம் நடத்தினர்.


திருப்பதி: திருப்பதியில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பொது முடக்க விதிமுறைகளை மீறி ஊர்வலம் நடத்தினர்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டியின் 48ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் மாநிலம் முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும், கேக் வெட்டியும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், அன்ன தானம், ரத்த தானம், பொருள் தானம் என செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி எம்எல்ஏ கருணாகர ரெட்டி, முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் திருப்பதியில் பெரும் ஊர்வலம் நடத்தினார்.
இதில் கலந்து கொண்ட தொண்டர்கள் யாரும் பொது முடக்க விதிமுறைகளை பின்பற்றவில்லை. அனைவரும் நெருங்கி கூட்டத்தோடு கூட்டமாக முகக்கவசம் அணியாமல் சாலையில் ஊர்வலம் சென்றனர். நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் இந்நிலையில் தொண்டர்கள் இவ்வாறு நடந்து கொண்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏழுமலையான் பிரசாதம்: ஆந்திர முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி தேவஸ்தான அதிகாரிகளுடன் இணைந்து ஜெகன்மோகனைச் சந்தித்து ஏழுமலையான் லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி சேஷ வஸ்திரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...