உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை சேதம்

உத்தரப் பிரதேசம் பாலியா மாவட்டத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது புதன்கிழமை தெரியவந்துள்ளது.
அம்பேத்கர் சிலை (கோப்புப்படம்)
அம்பேத்கர் சிலை (கோப்புப்படம்)


உத்தரப் பிரதேசம் பாலியா மாவட்டத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது புதன்கிழமை தெரியவந்துள்ளது.

இதுபற்றி காவல் துறை தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"சிக்கந்தர்பூர் பகுதியிலுள்ள சிகியா கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையின் கை சேதமடைந்திருந்தது இன்று காலை கண்டறியப்பட்டது. இந்த சிலை 18 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. அது சரி செய்யப்படும். கிராமத்தின் சூழல் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com