உத்தரப் பிரதேசம் பாலியா மாவட்டத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது புதன்கிழமை தெரியவந்துள்ளது.
இதுபற்றி காவல் துறை தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"சிக்கந்தர்பூர் பகுதியிலுள்ள சிகியா கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையின் கை சேதமடைந்திருந்தது இன்று காலை கண்டறியப்பட்டது. இந்த சிலை 18 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. அது சரி செய்யப்படும். கிராமத்தின் சூழல் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது."