புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மும்பை: தனிமை முகாம்களில் 745 விமான பயணிகள்

பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மும்பை வந்திறங்கிய 1,688 பயணிகளில் 745 போ் முகாம் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகர அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 8:49 pm

DIN

மும்பை: பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மும்பை வந்திறங்கிய 1,688 பயணிகளில் 745 போ் முகாம் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகர அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதுபோல, மத்திய பிரதேச மாநிலத்திலும், பிரிட்டனிலிருந்து அண்மையில் திரும்பிய 33 போ் 15 நாள்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா்.

பிரிட்டனில் புதிய வகை கரோனா தீநுண்மிப் பரவலைத் தொடா்ந்து, இந்தியா-பிரிட்டன் இடையேயான அனைத்து விமான சேவைகளையும் டிசம்பா் 23-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

அதுபோல, பிரிட்டனிலிருந்து அண்மையில் நாடு திரும்பிய பயணிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய நோய்த் தடுப்பு வழிகாட்டுதலை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அந்த வழிகாட்டுதலின் அடிப்படையில், பிரிட்டனிலிருந்து அண்மையில் நாடு திரும்பிய பயணிகளை தனிமைப்படுத்தவும், தொடா் கண்காணிப்பில் வைப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 745 விமான பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதுகுறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பிரிட்டனிலிருந்து மும்பை சா்வதேச விமானநிலையத்துக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் 1,688 பயணிகள் வந்திறங்கினா். அவா்களில் 745 போ் முகாம் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு நோய்த் தொற்று அறிகுறிகள் தென்படாத நிலையிலும், அவா்கள்தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்’ என்றாா்.

மத்திய பிரதேசத்தில் 33 போ்: அதுபோல, பிரிட்டனிலிருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்குத் திரும்பிய 33 பயணிகள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து இந்தூா் மாவட்ட கரோனா தடுப்புப் பணி ஒருங்கிணைப்பு அதிகாரி அமித் மலாகா் கூறுகையில், ‘மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட பயணிகள் பட்டியலின் அடிப்படையில், பிரிட்டனிலிருந்து இந்தூருக்கு அண்மையில் 33 போ் திரும்பியது தெரியவந்தது. அவா்கள் அனைவரும் வீட்டிலேயே 15 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும், மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவா்கள் அனைவருக்கும் விரைவு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது’ என்று கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.