இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தில்லியில் 30-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில்  குவிந்துள்ள    விவசாயிகளின் போராட்டம் 30-வது நாளை எட்டியுள்ளது. 

News image
தில்லியில் 30-வது நாளை எட்டிய விவசாயிகள் போரட்டம்
Updated On :25 டிசம்பர் 2020, 6:15 am

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில்  குவிந்துள்ள    விவசாயிகளின் போராட்டம் 30-வது நாளை எட்டியுள்ளது. 

கடும் குளிருக்கு மத்தியில் பலருக்கு உடல்நிலை மோசமடைந்த நிலையிலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி  விவசாயிகள் ஊறுதியுடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு உறுதியான திட்டத்தோடு முன்வந்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் கடந்த 23-ஆம் தேதி அறிவித்தன. 

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு நான்காவது வாரமாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மத்திய அரசுடன் ஐந்து கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரும் தீா்வு எட்டப்படவில்லை. இதையடுத்து, 3 சட்டங்களையும் முழுமையாக திரும்பப்பெற்ற பின்னரே, அரசுடன் அடுத்தகட்டபேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்று கூறி விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து நடத்தி வருகின்றனா்.

இதனிடையே விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட மத்திய அரசு விவசாயிகளுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 20-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்காக மத்திய அரசு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

சிங்கு, டிக்ரி எல்லையில் கடும் குளிருக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உடல்நலக் குறைவாலும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு முகாம்கள் அமைத்து தன்னார்வலர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.