இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

போராட்டத்திற்கு மத்தியில் விவசாயம்: வெங்காய விளைச்சலில் ஈடுபடும் விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தின் மத்தியில் தங்களது அன்றாட உணவுத் தேவைக்காக வெங்காய விளைச்சலில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.

News image
போராட்டத்திற்கு மத்தியில் விவசாயம்: வெங்காய விளைச்சலில் ஈடுபடும் விவசாயிகள்
Updated On :27 டிசம்பர் 2020, 5:55 am

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தின் மத்தியில் தங்களது அன்றாட உணவுத் தேவைக்காக வெங்காய விளைச்சலில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 32 நாள்களாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகள் தோல்விற்ற நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 29ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தில்லியின் புராரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அருகில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளனர். தங்களது போராட்டம் மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ள விவசாயிகள் அப்பகுதியில் வெங்காயம் பயிரிடத் தொடங்கியுள்ளனர்.

"ஆர்ப்பாட்டங்களின் மத்தியில் வெங்காயம் பயிரிட்டால் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்பதால் அதைப் பற்றி யோசித்தோம். புராரி நிலத்தில் அதிக பயிர்களை வளர்ப்போம்" என்று விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.