இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விவசாயிகள் போராட்டத்தை அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்: சரத் பவார்

​புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :28 டிசம்பர் 2020, 1:23 pm

DIN


புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

"விவசாயிகளின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தீர்வு காணப்பட வேண்டும். 4 அல்லது 5 பேர் தற்கொலை செய்துகொண்டதாகக் கேள்விபட்டேன். இதே நிலை நீடித்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல."

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளை முற்றுகையிட்டு கடந்த 33 நாள்களாக போராடி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஐந்து முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் வரும் 30-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.