இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ராஜஸ்தான்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள், காவலர்கள் இடையே மோதல்

ராஜஸ்தான் - ஹரியாணா எல்லையிலிருந்து தில்லியில் நுழைய முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

News image
ராஜஸ்தான்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள், காவலர்கள் இடையே மோதல் (கோப்புப்படம்)
Updated On :31 டிசம்பர் 2020, 1:10 pm

DIN


ராஜஸ்தான் - ஹரியாணா எல்லையிலிருந்து தில்லியில் நுழைய முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

ஹரியாணா எல்லையில் காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் தகர்த்து தில்லி எல்லையில் நுழைய முயன்றனர். 

இதேபோன்று ராஜஸ்தான் மாநிலம் ஷாஜகான்பூர் - ரிவாரி எல்லையிலும் தில்லி நோக்கி விவசாயிகள் நுழைய முயன்றனர்.

காவல்துறையினரின் தடுப்புகளை தகர்த்து தில்லியினுள் நுழைய முயன்றதால் காவல்துறையினர் விவசாயிகளைத் தடுக்கும் வகையில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், தண்ணீரையும் பீய்ச்சியடித்து கலைத்தனர்.

இது குறித்து பேசிய கிஷான் பஞ்சாயத்து தலைவர் ராம்பால் ஜாத், விவசாயிகள் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று வரும் நிலையில், சிலர் இவ்வாறு செய்வது அதிருப்தியளிக்கிறது. வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று விவசாயிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் பேசுவதற்கு குழுவில் இருந்து சிலரை அனுப்பி வைத்துள்ளோம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.