கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

இந்தியாவில் கரோனா பரிசோதனை ஒரு கோடியைத் தாண்டியது

இந்தியாவில் திங்கள்கிழமை மதியம் நிலவரப்படி ஒரு கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image

இந்தியாவில் கரோனா பரிசோதனை ஒரு கோடியைத் தாண்டியது

Updated On :6 ஜூலை 2020, 7:28 am

ANI

இந்தியாவில் கரோனா பரிசோதனை ஒரு கோடியைத் தாண்டியது
புது தில்லி: இந்தியாவில் திங்கள்கிழமை முற்பகல் நிலவரப்படி ஒரு கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை நிலவரப்படி 7 லட்சத்தை எட்டும் நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை ஒரு கோடியை எட்டிவிட்டது.

நேற்று ஒரே நாளில் நாட்டில் 24,248 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 6,97,413 ஆக உயர்ந்துள்ளது.

ஐசிஎம்ஆர் இது குறித்து வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், திங்கள்கிழமை முற்பகல் 11 மணி நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 1,00,04,101 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.