மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மனுவில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்: பைலட் தரப்புக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

தகுதி நீக்கம் தொடர்பாக ராஜஸ்தான் பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் திருத்தம் மேற்கொள்ள சச்சின் பைலட் தரப்புக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

News image
தகுதி நீக்கம் தொடர்பாக ராஜஸ்தான் பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் திருத்தம் மேற்கொள்ள சச்சின் பைலட் தரப்புக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. (கோப்புப்படம்)
Updated On :16 ஜூலை 2020, 11:03 am

DIN


தகுதி நீக்கம் தொடர்பாக ராஜஸ்தான் பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் திருத்தம் மேற்கொள்ள சச்சின் பைலட் தரப்புக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில், 19 பேரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்குமாறு ராஜஸ்தான் பேரவைத் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தது.

இந்த நிலையில், மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே, "எம்எல்ஏ-க்கள் மனுவில் திருத்தம் மேற்கொள்ள விரும்புகின்றனர். எனவே, திருத்தம் செய்து புதிதாக தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்று வாதாடினார். இதற்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இந்த வழக்கு தற்போது 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.