மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனாவுக்கு எதிராக பிகார் அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை: காங்கிரஸ் எம்பி அகிலேஷ் பிரசாத்

கரோனாவுக்கு எதிராக பிகார் அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என் காங்கிரஸ் மாநிலங்களை உறுப்பினர் அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :19 ஜூலை 2020, 3:07 pm

DIN

கரோனாவுக்கு எதிராக பிகார் அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என் காங்கிரஸ் மாநிலங்களை உறுப்பினர் அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்துள்ளார். 

பிகாரில் கடந்த சில தினங்களாக கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறார். அங்கு இன்று மட்டும் 1412 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,379ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16,597 பேர் குணமடைந்தனர். மேலும் 9,602 பேர் தற்போதைய நிலவரப்படி சிகிச்சையில் உள்ளனர்.

இதுறித்து காங்கிரஸ் எம்பி அகிலேஷ் பிரசாத் கூறியதாவது, கரோனாவுக்கு எதிராக போராட அரசு எதுவும் செய்யவில்லை. பிகார் மக்கள் முற்றிலும் கடவுளை நம்பிதான் இருக்கிறார்கள். வரும் நாள்களில் பிகாரில் கரோனாவுக்கு அதிகமான மக்கள் இறக்க நேரிடலாம். தொற்று பரவுகிறது என்றாலும் பிகாரில் இன்னும் குறைவான சோதனைகளே மேற்கொள்ளப்படுகின்றன. 10 கோடிக்கும் அதிகமான மக்கள் மாநிலத்தில் வாழ்கின்றனர். 

உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பிகாரில் 20 சதவீத சோதனை மட்டுமே நடத்தப்படுகிறது. "நிதீஷ் குமார் எதையும் செய்ய விரும்பவில்லை. ஆனால் அவர் எப்படியாவது ஆட்சியில் மட்டுமே நீடிக்க விரும்புகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.