நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் மேலும் 49,931 போ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக தரவுகளின்படி திங்கட்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் புதிதாக 49,931 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,35,453 -ஆக அதிகரித்துள்ளது.
அதே சமயம் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 9,17,568 ஆக அதிகரித்தது. 4,85,114 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். திங்கட்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு மேலும் 708 போ் உயிரிழந்தனா். இதன் மூலமாக நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 32,771-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 375799 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 213238 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 13656 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் தமிழகத்தில் 213723 பேருக்கும், தில்லியில் 130606 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.