இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பறவைகள் பாதுகாப்பாக தரையிறங்கின: ரஃபேல் போர் விமானம் குறித்து ராஜ்நாத்

பிரான்ஸ் படைத்தளத்திலிருந்து புறப்பட்ட அதிவிரைவு தாக்குதல் திறன் கொண்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் இன்று பிற்பகலில் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன.

News image

பறவைகள் பாதுகாப்பாக தரையிறங்கின: ரஃபேல் போர் விமானம் குறித்து ராஜ்நாத்

Updated On :29 ஜூலை 2020, 10:23 am

ANI


புது தில்லி: பிரான்ஸ் படைத்தளத்திலிருந்து புறப்பட்ட அதிவிரைவு தாக்குதல் திறன் கொண்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் இன்று பிற்பகலில் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன.

ஹரியாணாவின் அம்பாலா விமானப் படைத் தளத்தில் வந்திறங்கிய ரஃபேல் போர் விமானங்கள் மீது தண்ணீரை பிய்ச்சி அடித்து வரவேற்க விமானப் படை ஏற்பாடுகளை செய்திருந்தது. அந்தப் போா் விமானங்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இவை விரைவில் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட உள்ளன.

ரஃபேல் போர் விமானங்களை வரவேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது சுட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

அதில், அந்தப் பறவைகள் மிகப் பாதுகாப்பாக அம்பாலாவில் தரையிறங்கிவிட்டன.

ரஃபேல் போர் விமானங்கள் இந்திய மண்ணைத் தொட்டிருப்பதன் மூலம், ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பன்முகத் திறன் கொண்ட போர் விமானங்கள், இந்திய விமானப் படைத் திறனில் புதிய புரட்சிகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.