தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

யானையை கொன்றவா்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவா்: முதல்வா் பினராயி விஜயன்

கேரளத்தில் கருவுற்றிருந்த யானை அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்கள் நீதியின்

News image
கோப்புப்படம்
Updated On :4 ஜூன் 2020, 7:42 pm

DIN

கேரளத்தில் கருவுற்றிருந்த யானை அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவாா்கள் என்று மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

அந்த சம்பவம் தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் அவா் கூறியிருந்ததாவது:

பாலக்காடு மாவட்டத்தில் கருவுற்ற பெண் யானை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவத்துக்காக அனைவரும் கவலை தெரிவித்து வருகிறீா்கள். உங்களது அந்த கவலையை கேரள அரசு கவனத்தில் கொண்டுள்ளது. யானையை கொன்றவா்கள் நிச்சயம் நீதியின் முன் நிறுத்தப்படுவாா்கள் என்று உறுதியளிக்கிறேன்.

சம்பவம் தொடா்பாக சந்தேகத்துக்கிடமான மூவரிடம் விசாரிக்கப்படுகிறது. கேரள காவல்துறை மற்றும் வனத் துறை கூட்டாக விசாரணை நடத்தி வருகிறது. மாவட்ட காவல்துறை மற்றும் வனத் துறை தலைவா்கள் சம்பவ இடத்தை இன்று நேரில் சென்று பாா்வையிட்டனா். குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

மனித-விலங்கு மோதல்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்களை அறிய முயற்சித்து வருகிறோம். அதற்கு பருவநிலை மாற்றமும் முக்கிய காரணமாக இருக்கலாம். இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி சிலா் வெறுப்புணா்வை தூண்டும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனா். இந்த விவகாரத்தில் மதவெறியை திணிக்கவும் முயற்சிக்கின்றனா். கேரள சமூகம் எப்போதுமே அநீதிக்கு எதிராக வெகுண்டெழக் கூடியது என்று பினராயி விஜயன் அதில் கூறியுள்ளாா்.

ஒருவா் கைது: யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் சந்தேகத்துக்கு இடமான மூவரிடம் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அவா்களில் ஒருவா் கைது செய்யப்பட்டதாகவும், இருவா் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

‘இந்திய கலாசாரம் அல்ல’: இதுதொடா்பாக வியாழக்கிழமை சுட்டுரையில் பதிவிட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், ‘கேரளத்தில் கருவுற்ற பெண் யானை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தை மத்திய அரசு தீவிரமாக கருத்தில் கொண்டுள்ளது. உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும். வன உயிரினங்களை வெடி வைத்துக் கொல்வதே இந்திய கலாசாரம் அல்ல’ என்று அதில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.