காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சிகிச்சை கட்டணத்தை செலுத்தாததால் 80 வயது முதியவரை கட்டிலில் கட்டிவைத்த தனியார் மருத்துவமனை 

மத்திய பிரதேசத்தில் முதியவர் ஒருவர் தனது சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்தத் தவறியதால் மருத்துவமனை நிர்வாகம் அவரை கட்டிலுடன் கட்டிப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :7 ஜூன் 2020, 1:22 pm

DIN

மத்திய பிரதேசத்தில் முதியவர் ஒருவர் தனது சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்தத் தவறியதால் மருத்துவமனை நிர்வாகம் அவரை கட்டிலுடன் கட்டிப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம், ஷாஜாபூர் பகுதியில் அமைந்துள்ள ராணாயர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது முதியவர் லட்சுமி நாராயணன். இவருக்கு அண்மையில் வயிற்று வலி ஏற்படவே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆரம்பத்தில் முதியவரின் குடும்பத்தினர் முன்பணமாக ரூ.6 ஆயிரத்தை கட்டியுள்ளனர். அவர்களால் மேற்கொண்டு பணம் கட்டமுடியவில்லை. 

இதையடுத்து அவரை டிஸ்சார்ஜ் செய்யும்படி முதியவரின் மகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் மேலும் ரூ.11 ஆயிரம் வரை பணம் கட்ட வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து அந்த முதியவர் மருத்துவமனையில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காக மருத்துவமனையில் இருந்த படுக்கை ஒன்றில் அவரை கட்டி வைத்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

முதலில் நிர்ணயித்த 5 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை செலுத்தி விட்டதாகவும், ஒருநாள் கூடுதலாக சிகிச்சை அளித்துவிட்டு தற்போது 11 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்பதாகவும், மருத்துவமனை மீது முதியவரின் மகள் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார். 

இதுகுறித்து விசாரணை நடத்த மருத்துவமனைக்‍கு குழுவை அனுப்பியுள்ளதாகவும், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும், ஷாஜாபூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.