தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மகாராஷ்டிரத்தில் 90 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 2,259 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 ஜூன் 2020, 3:42 pm

DIN


மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 2,259 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம் மற்றும் மும்பையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,259 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 120 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 90,787 ஆக உயர்ந்துள்ளது. இதில் 42,638 பேர் குணமடைந்துள்ளனர், 44,849 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 3,289 பேர் பலியாகியுள்ளனர்.

மும்பை:

மும்பையில் புதிதாக 1,015 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 58 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 50,878 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 904 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 22,942 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 1,758 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.