தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கரோனா இல்லை

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கரோனா இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :9 ஜூன் 2020, 1:04 pm

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கரோனா இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு கடந்த ஜூன் 7 ஆம் தேதி லேசான காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து, அவருக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை அல்லது நாளை காலை அவரது பரிசோதனை முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பரிசோதனை முடிவில் கேஜரிவாலுக்கு கரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. 

தில்லி அரசுத் தரப்பில் இருந்து இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.