இந்தியா - சீனா - ரஷியா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை

இந்தியா, சீனா, ரஷியா நாடுகளிடையே இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை காணொலி மூலமாக நடைபெற்று வருகிறது. 
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
Published on
Updated on
1 min read

இந்தியா, சீனா, ரஷியா நாடுகளிடையே இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை காணொலி மூலமாக நடைபெற்று வருகிறது. 

இந்த மாநாட்டில் இந்தியத் தரப்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டுள்ளார். சீனா, ரஷியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில், இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவத் தளபதி நரவனே எல்லை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய இன்று லடாக் சென்றுள்ளார். 

இந்தியா - சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருநாட்டு ராணுவத்தினரும் தங்கள் படைகளை விலக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com