இந்தியா
பிகாரில் கார் - டிராக்டர் நேருக்கு நேர் மோதல்: 11 பேர் பலி
பிகாரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு காரும், டிராக்டரும் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிகாரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு காரும், டிராக்டரும் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிகார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் சொகுசு கார் சுக்கு நூறாக உடைந்தது. இதனால் காரில் பயணித்தவர்கள் அனைவருமே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணைக்குப் பின்னரே விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும்.