இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :23 மார்ச் 2020, 10:42 am

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில் அதன் ஒருபகுதியாக, சிறைகளில் உள்ள கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், 'சிறைகளில் கரோனா வைரஸ் தாக்கம் ஏற்படாமல்/ அதிகரிக்காமல் இருக்க 7 ஆண்டுகள் வரை தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகள், விசாரணைக் கைதிகளை  4 முதல் 6 வாரங்கள் வரை பரோலில் விடுவிப்பது தொடர்பாக மாநில அரசுகள் முடிவெடுக்கலாம். இதற்காக மாநில அரசு ஒரு குழுவை அமைத்து சட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.