காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றும் பணி தொடக்கம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோருக்கு சிகிச்சையளிப்பதற்காக ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 மார்ச் 2020, 4:48 pm

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோருக்கு சிகிச்சையளிப்பதற்காக ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே (என்எஃப்ஆர்) தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் சுபனன் சந்தா ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில்,

"இந்தியாவின் 17 ரயில்வே மண்டலங்களில், வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே மற்றும் வடக்கு ரயில்வேவை முதலாவதாக சோதனை அடிப்படையில் ரயில்வே பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றுமாறு ரயில்வே வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தத் திட்டம் அரசுக்கு உதவும் வகையில் இருக்கும்.

ரயில்வேயின் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு காமாக்யா மற்றும் குவாஹட்டியில் உள்ள ரயில் பெட்டி பராமரிப்பு மையத்தில் ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. ஏசி அல்லாத சாதாரண பெட்டிகள் ஏற்கெனவே தனி வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. ரயில் பெட்டியில் உள்ள ஒவ்வொரு கேபினும், ஒருவரை உள்ளடக்கும் வகையில் தனி வார்டுகளாக மாற்றப்படும். ஒரு பெட்டியில் அதுபோன்று 9 கேபின்கள் உள்ளன. ஒரு பெட்டியில் இருக்கும் 4 கழிவறைகளில் ஒன்றை குளியலறையாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றப்படும்.

வெப்பத்தைத் தணிப்பதற்கான ரயில் பெட்டியின் மேற்கூரை மற்றும் இரண்டு பக்கங்களிலும் மூங்கில் தட்டிகளால் மறைக்கப்படும். 

ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றப்படும் இந்த சோதனை முயற்சி கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோருக்கு சிகிச்சையளிக்க பயன்படும் வகையில் அமைந்தால், அனைத்து 17 ரயில்வே மண்டலங்களையும் இதுபோன்று ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்ற ரயில் வாரியம் அறிவுறுத்தும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.