விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பத்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அறுபது வயது முதியவர் கைது

ஆந்திராவில் பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக  அறுபது வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image

மாதிரிப்படம்

Updated On :25 மே 2020, 12:03 pm

ANI

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக  அறுபது வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திராவின் கசிம்கோட்டா மண்டலத்தில் உள்ள நரசுபுரம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் புகார் செய்ததையடுத்து, அப்பெண் அனகாபள்ளி திஷா காவல் நிலையத்தில் மே 23-ஆம் தேதியன்று புகார் செய்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டுள்ள அறுபது வயது எருக்கா நாயுடுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தகவல்களை அனகாபள்ளி திஷா காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் குமார் சாமி உறுதிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.