ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு 2,671-ஐ எட்டியது!
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 44 புதிய வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,671 ஆக உயர்ந்துள்ளது.


அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 44 புதிய வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,671 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கரோனா தொற்று பாதித்து 767 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது என்று ஆந்திர மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 1,38,845 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 57,721 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 77,103 பேர் செயலில் உள்ள வழக்குகள் ஆகும். இன்றுவரை கரோனா நோய்த் தொற்று காரணமாக 4,021 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...