முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் வெற்றி: இஸ்ரோவிற்கு பிரதமர் வாழ்த்து

பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய  இஸ்ரோவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
Updated On :7 நவம்பர் 2020, 11:50 am

DIN

பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய  இஸ்ரோவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து  தெரிவித்துள்ளார். 


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 3.12 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இ.ஓ.எஸ்.-01 செயற்கைக்கோள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 9 செயற்கைக்கோள்கள்  என 10 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

இஸ்ரோவின் இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரைப் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, ''அமெரிக்கா, லக்சம்பர்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா 4 செயற்கைக் கோள்களும், லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த ஒரு செயற்கைக்கோளும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விஞ்ஞானிகள் பல தடைகளை முறியடித்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.