பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் வெற்றி: இஸ்ரோவிற்கு பிரதமர் வாழ்த்து
பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 3.12 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இ.ஓ.எஸ்.-01 செயற்கைக்கோள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 9 செயற்கைக்கோள்கள் என 10 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இஸ்ரோவின் இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரைப் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, ''அமெரிக்கா, லக்சம்பர்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா 4 செயற்கைக் கோள்களும், லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த ஒரு செயற்கைக்கோளும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விஞ்ஞானிகள் பல தடைகளை முறியடித்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...