மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்படும்: கேஜரிவால்

தில்லி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
Updated On :18 நவம்பர் 2020, 1:03 pm

DIN


தில்லி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், கிழக்கு தில்லியிலுள்ள ஜி.டி.பி. மருத்துவமனையை, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால், ''தில்லியில் கரோனா தொற்று பரவி வருவதால், அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். வெவ்வேறு பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 660 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் அமைக்கப்படும். 

ஜி.டி.பி. மருத்துவமனை மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டோம். அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்காக அடுத்த இரண்டு நாள்களில் கூடுதலாக 238 படுக்கைகளை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளனர். கரோனா பரவலால் ஏற்படும் நெருக்கடியை மருத்துவர்கள் சிறப்பாக கையாண்டு வருகின்றனர்.'' என்று கூறினார்.

தில்லியில் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி முதல் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக கரோனா தொற்று பதிவாகி வருகிறது. நவம்பர் 11-ஆம் தேதி 8 ஆயிரத்திற்கும் அதிகமாக கரோனா தொற்று பதிவாகியது. 

நேற்றைய (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி தில்லியில் 6,396 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.95 லட்சத்தைக் கடந்துள்ளது.

புதிதாக 99 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பலியானதால், மொத்தமாக தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 7,812-ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.