மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக்கோரி பாஜகவினர் போராட்டம்

தில்லியில் காற்று மாசுபாடு மற்றும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக் கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக்கோரி பாஜகவினர் போராட்டம்
Updated On :19 நவம்பர் 2020, 10:37 am

DIN

தில்லியில் காற்று மாசுபாடு மற்றும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக் கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல் உள்பட ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டு முதல்வருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சாலையோர மரங்களில் தண்ணீர் தெளித்தல், சிக்னலில் வாகனங்களை நிறுத்திவைத்தல், காடுகள் வளர்ப்பை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டுள்ளது.

இதேபோன்று தற்போது மூன்றாவது முறையாக கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிரித்தல், பொது இடங்களில் பரிசோதனைகளை இரட்டிப்பாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (வியாழக்கிழமை) அரவிந்த் கேஜரிவால் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டமும் நடைபெற்றது.

இதனிடையே தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லி பாஜக மாநிலத் தலைவர் விஜய் கோயல் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஏராளமான பாஜக தொண்டர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கலந்துகொண்டு கேஜரிவாலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.