யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரில் பயணித்தாலும் முகக்கவசம் கட்டாயம்: தில்லி சுகாதாரத்துறை

காரில் பயணிக்கும் மக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்)
Updated On :20 நவம்பர் 2020, 7:56 am

DIN

காரில் பயணிக்கும் மக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

காரினுள் முகக்கவசம் அணிவதால் எந்தவித சிரமமும் இல்லை. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தில்லியில் கரோனா மூன்றாவது முறையாக மீண்டும் அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 

இதனிடையே இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ''கரோனா பரவி வரும் சூழலில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மக்கள் இந்த விதியினைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.2,000 அபராதம் வசூலிக்கும் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்து பகுதிகளிலும் அமலாகியுள்ளது.

தொற்றால் பாதிக்கப்படுவோரை கண்டறியும் முறை ஏற்கனவே மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடுகளாக சென்று கரோனா பாதிப்பு குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள 60 சதவிகித கரோனா படுக்கைகள் தில்லி அரசு சார்பில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.