இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திட்டவட்டமான முடிவுக்காகவே தில்லி வந்துள்ளோம்: விவசாயிகள்

​வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் திட்டவட்டமான ஒரு முடிவுக்காகவே தில்லி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

News image
விவசாய சங்கத் தலைவர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அரசியல் செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ்
Updated On :30 நவம்பர் 2020, 1:14 pm

DIN


வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் திட்டவட்டமான ஒரு முடிவுக்காகவே தில்லி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லியில் கடந்த 5 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை விவசாயிகள் தரப்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது விவசாயிகள் பிரதிநிதி ஒருவர் தெரிவித்ததாவது:

"எங்களது 'மனதின் குரலை' பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் பேசித் தீர்க்கக் கூடியவை அல்ல. எங்களது பிரச்னைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் அவர்கள் பெரிய விளைவைச் சந்திக்க நேரிடும். ஒரு திட்டவட்டமான முடிவுக்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்" என்றார்.

மற்றொரு விவசாயத் தலைவர் குர்னம் சிங் தெரிவித்ததாவது:

"போராட்டத்தை ஒடுக்குவதற்காக போராட்டக்காரர்கள் மீது சுமார் 31 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும்" என்றார் அவர்.

முன்னதாக டிசம்பர் 3-ம் தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற அமித் ஷாவின் நிபந்தனையை 30 விவசாயக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தன. மேலும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.