யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்குவங்கத்தில் பாஜகவினர் மீது காவல்துறை தடியடி: மத்திய அமைச்சர் கண்டனம்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜகவினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
கொல்கத்தாவில் கலவரமாக மாறிய பாஜக பேரணி
Updated On :8 அக்டோபர் 2020, 12:01 pm

DIN

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜகவினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் மாநில அரசைக் கண்டித்து தலைமை செயலகத்தை நோக்கி நூற்றுக்கணக்கான பாஜகவினர் வியாழக்கிழமை பேரணியில் ஈடுபட்டனர்.  இந்த பேரணிக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி மீறி பேரணி நடத்திய நிலையில், மேற்குவங்க அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜகவினர் சாலையில் டயர்களை தீயிட்டு எரித்தனர். 

மேலும் பேரணி நடத்தியவர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால், காவல்துறையினர் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் பாஜக மாநிலத்துணைத்தலைவர் ராஜூ பானர்ஜி உள்பட பலர் படுகாயம் அடைந்தனர். 

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “கட்சியின் மூத்த தலைவர்கள் மீது மேற்கு வங்க காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான நடத்தையை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. காவல்துறை மற்றும் லத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாஜகவின் தடுத்து நிறுத்துவதில் உங்களால் வெற்றி பெற முடியாது.” என தெரிவித்துள்ளார்.

மேலும் காவல்துறை சார்பில் பீய்ச்சியடிக்கப்பட்ட தண்ணீரில் ரசாயனங்கள் கலந்திருப்பதாக ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.