யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காங்கிரஸில் இணைந்த சரத் யாதவின் மகள்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தேசியத் தலைவரான சரத் யாதவின் மகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

News image
காங்கிரஸில் இணைந்த சரத் யாதவின் மகள்
Updated On :14 அக்டோபர் 2020, 10:03 am

DIN

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தேசியத் தலைவரான சரத் யாதவின் மகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பிகாரில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தேசியத் தலைவரான சரத் யாதவின் மகள் சுபாஷினி யாதவ் உள்ளூர் தலைவர்களின் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

மேலும் லோக் ஜனசக்தியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காளி பாண்டேவும் காங்கிரஸ்  கட்சியில் இணைந்தார்.

பிகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாகவும், அவர்களுக்கு தொகுதியில் போட்டியிடும் வகையில் இடம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய சுபாஷினி யாதவ், பிகார் தேர்தலில் காங்கிரஸ் மகா கூட்டணியில் இருந்து போராடுவேன். இதற்கு எனது தந்தையும் ஆதரவு தெரிவித்துள்ளார். 

எனக்கு வாய்ப்பு வழங்கியதற்காக சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் எனது தந்தையால் தேர்தலில் இயங்க முடியவில்லை.  பிகாரை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்வதற்காக தேர்தலில் போரிடுவது எனது பொறுப்பு என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.