குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிகாரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிகார் மாநிலத்தின் தர்பங்காவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

News image
பிகாரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Updated On :15 செப்டம்பர் 2020, 12:28 pm

DIN

பிகார் மாநிலத்தின் தர்பங்காவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பீகாரில் உள்ள தர்பங்காவில் புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது, இது பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனாவின் (பி.எம்.எஸ்.எஸ்.ஒய்) கீழ் நிறுவப்படும்.

பிகார் மாநிலத்தில் ரூ.1264 கோடி நிதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த புதிய எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ மற்றும் செவிலியர் படிப்புகளுக்கான கற்பித்தல், குடியிருப்பு வளாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

750 படுக்கைகள் திறன் கொண்டதாக அமைக்கப்படும் இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, ஆயுஷ் பிரிவு, கலையரங்கம், இரவு விடுதிகள், விருந்தினர் மாளிகை மற்றும் குடியிருப்பு வசதிகள் போன்றவை இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.புதிய எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு மத்திய அரசு முழு நிதியுதவி அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிகாரில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி 48 மாதத்தில் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.