அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரஷியா கரோனா தடுப்பூசி: இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம்

ரஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கவும், ஆய்வு செய்யவும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2020, 3:45 pm

DIN


ரஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கவும், ஆய்வு செய்யவும் டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷியாவின் கமாலேயா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வு மையம் கரோனாவுக்காக ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் ஆய்வு செய்யவும் தயாரிக்கவும் ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்ததையடுத்து, 10 கோடி தடுப்பூசிகளை வழங்க ரஷியா முடிவு செய்துள்ளது.

சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தவுடனும், இந்திய ஒழுங்குமுறை ஆணையங்களால் பதிவு செய்த பிறகும் இந்த ஆண்டு கடைசியிலிருந்து தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்படும் என்று ரஷிய நேரடி முதலீடு நிதியம் (ஆர்டிஐஎஃப்) தெரிவித்துள்ளது.

டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது ஆர்டிஐஎஃப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.