யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிகாரில் ரூ.14000 கோடியில் நெடுஞ்சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

பிகாரில் திங்கள்கிழமை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்ட உள்ளார்.

News image
பிரதமர் மோடி
Updated On :19 செப்டம்பர் 2020, 2:34 pm

DIN

பிகாரில் திங்கள்கிழமை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்ட உள்ளார்.

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மாநிலத்தில் போக்குவரத்துக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.14 ஆயிரத்து 258 கோடி மதிப்பில் 9 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் மாநிலத்தின் 45,945 கிராமங்கள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 350 கி.மீ நீளம் அமைக்கப்பட உள்ள இந்த நெடுஞ்சாலை மூலம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மேம்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் மாநிலத்தில் ரயில்வே, உள்கட்டமைப்பு, பாலங்கள், குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மோடி சமீபத்தில் அடிக்கல் நாட்டி வருகிறார்.

2015 ஆம் ஆண்டில் பிகாரின் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒரு சிறப்பு தொகுப்பை மோடி அறிவித்திருந்தார். இந்த தொகுப்பில் ரூ .54,700 கோடி மதிப்புள்ள 75 திட்டங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் 13 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மேலும் 38 வேலைகள் நடைபெற்று வருகின்றன, மற்றவை தொடங்கப்பட உள்ளன என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.