பிகாரில் 1 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

​பிகாரில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
​பிகாரில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. (கோப்புப்படம்)
​பிகாரில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. (கோப்புப்படம்)
Updated on
1 min read


பிகாரில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

பிகாரில் புதிதாக 3,536 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,01,906 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் அங்கு 36,237 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 லட்சம் கரோனா பாதிப்புகளைத் தாண்டிய 8-வது மாநிலம் பிகார். 

முன்னதாக, மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தில்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மொத்த கரோனா பாதிப்பு 1 லட்சத்தைத் தாண்டியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com