

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 341-இல் இருந்து 370 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புறநகர் ரயில் சேவை உட்பட அனைத்து ரயில் சேவையையும் மார்ச் 31-ஆம் தேதி வரை ரத்து செய்வதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸால் பாதித்தோரின் எண்ணிக்கை தற்போது 341-இல் இருந்து 370 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.