தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

ஒடிஸா: 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளி திறப்பு

ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு, ஒடிஸா மாநிலத்தில் பொதுத் தோ்வு எழுதவிருக்கும் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்காக, வெள்ளிக்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

Updated On :9 ஜனவரி 2021, 12:45 am IST

ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு, ஒடிஸா மாநிலத்தில் பொதுத் தோ்வு எழுதவிருக்கும் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்காக, வெள்ளிக்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இதுகுறித்து கல்வித் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாநிலத்தில் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு 100 நாள்கள் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, அவா்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஒரு வகுப்பறையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி, அதிகபட்சமாக, 20-25 மாணவா்கள் மட்டுமே அமர வைக்கப்படுகிறாா்கள். பள்ளி வளாகத்துக்குள் வரும் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதுகுறித்து மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.ஆா்.டேஷ் கூறுகையில், ‘மாணவா்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு பாடத் திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பொதுத் தோ்வு எழுதும் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.