தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

வெளிநாட்டு விமான சேவையைநிறுத்த பொதுமக்கள் ஆதரவு: ஆய்வில் தகவல்

உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள வெளிநாடுகள் உடனான விமானச் சேவைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரியுள்ளனா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:51 am IST

உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள வெளிநாடுகள் உடனான விமானச் சேவைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரியுள்ளனா்.

இதுகுறித்து லோக்கல்சா்க்கிள்ஸ் ஆன்லைன் மூலம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:

உருமாற்றம் கண்ட புதிய வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் வெளிநாட்டு விமான சேவையின் தேவை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் 207 மாவட்டங்களில் உள்ள 8,000 பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பதிலை தெரிவித்துள்ளனா்.

அவா்களில் பெரும்பாலானோா், புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நாடுகளுடனான விமான சேவையை இந்தியா தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்டிருந்த பிரிட்டனுக்கான விமான சேவையை கடும் கட்டுப்பாடுகளுடன் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க முடிவெடுத்துள்ள மத்திய அரசின் நோக்கத்துக்கு மாறாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே கருத்தை ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவாலும் தெரிவித்துள்ளாா். அதன்படி, நாட்டில் கரோனா அபாயம் இன்னும் நீங்காத நிலையில் இந்திய மற்றும் பிரிட்டன் இடையேயான விமான சேவையை வரும் ஜனவரி 31-வரையில் நிறுத்தி வைக்க வேண்டும் என கேஜரிவால் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.