யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல்

சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று செலுத்திக்கொண்டார்.  

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 10:44 am

DIN

சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று செலுத்திக்கொண்டார். 
நாடு முழுவதும் கரோனா தொற்று 2-ஆவது அலையாக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 16-ஆம் தேதிமுதல் கரோனாவுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 34,30,502 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 
நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 60 சதவீதம் தடுப்பூசிகள் மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கா்நாடகம், மத்திய பிரதேசம், கேரளம் ஆகிய எட்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. உலக அளவில் நாள் ஒன்றுக்கு அதிகம் தடுப்பூசிகள் செலுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. 
தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை ராய்பூரில் உள்ள ஜவஹகர் லால் மெமோரியல் மருத்துவக் கல்லூரில் இன்று செலுத்திக்கொண்டார். இத்தகவலை அவர் சுட்டுரையில் உறுதிபடுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.