யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை

ஆந்திரத்தில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிப் படுலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

News image
Updated On :15 ஏப்ரல் 2021, 11:02 am

DIN

ஆந்திரத்தில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிப் படுலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், ஜுட்டாடா பகுதியில் வசித்து வந்தவர் ராமாராவ்(67). நேற்றிரவு தன்னுடை வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்த அண்டை வீட்டாரான அப்பலராஜூ என்பவர் ராமாராவ், அவரது மனைவி உஷா, 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார். 
பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அலறல் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
மேலும், தலைமறைவாக இருந்த அப்பலராஜூவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஆந்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.