மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

யோகியை புகழ்ந்து தள்ளிய அமித் ஷா

சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாண்டதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :1 ஆகஸ்ட் 2021, 9:57 am

DIN

சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாண்டதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச தடய அறிவியல் கழக கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டம் ஒழுங்கை உத்தரப் பிரதேசம் சிறப்பாக கையாண்டதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு புகழாரம் சூட்டினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "2019ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகளாக உத்தரப் பிரதேசம் முழுவதும் பயணம் செய்துள்ளேன். எனவே, அதற்கு முன்பு மாநிலம் எப்படி இருந்தது என்பது குறித்து எனக்கு நன்றாக தெரியும். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மக்களிடையே ஒரு வித அச்ச உணர்வு காணப்படும்.

அதன் காரணமாகவே, மக்கள் அங்கிருந்து வெளியேறினர். பாதுகாப்பற்று இருக்கிறோம் என்ற உணர்வு பெண்களுக்கு இருந்தது. ஏழை மக்களின் நிலத்தை மாஃபியா கும்பல் பிடிங்கியது. காலை பொழுதிலேயே துப்பாக்குச்சூடு நடைபெறும். கலவரங்கள் அதிகமாக நிகழ்ந்தன.

2017ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசம் வளர்ச்சி மிக்க மாநிலமாக உருவாக்கப்படும் என பாஜக உறுதி அளித்தது. சட்டம் ஒழுங்கை முற்றிலுமாக புதுபித்தது. யோகியும் அவரது குழுவும் சட்டம் ஒழுங்கில் உத்தரப் பிரதேசத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்று விட்டதை நான் பெருமையுடன் இன்று சொல்லுவேன்.

சாதியை பார்த்தோ குடும்பத்தை பார்த்தோ அல்லது நமக்கு நெருக்குமாக இருக்கிறார்கள் என்பதை பார்த்தோ பாஜக அரசு வேலை செய்யவில்லை. ஏழை மக்களின் நலனுக்காக சட்டம் ஒழுங்கை புதுப்பிக்க பாஜக அரசு உழைக்கிறது. 44 வளர்ச்சி திட்டங்களில் உத்தர் பிரதேசம் முன்னணியில் உள்ளது" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.