இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாஜக கூட்டணியில் குழப்பம்: தாக்கத்தை ஏற்படுத்தும் பெகாஸஸ்

பெகாஸஸ் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், பாஜக கூட்டணி கட்சிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :4 ஆகஸ்ட் 2021, 7:31 am

DIN

பெகாஸஸ் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், பாஜக கூட்டணி கட்சிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், அரசின் உயர் அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் பெகாஸஸ் மென்பொருள் மூலம் வேவு பார்ப்பதற்கான இலக்கில் இருந்ததாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை கிளப்பியது. 

இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கிவருகின்றனர். உளவு மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்பட்டார்களா? என்பது குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்க அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இதில் விசாரணை நடத்த வேண்டும் என பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, மற்றொரு கூட்டணி கட்சியான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவும் இதே கோரிக்கையை விடுத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேசிய இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி, "இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தால், பெகாஸஸ் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். யார் வேவு பார்த்தார்கள் உள்பட உண்மைகளை கண்டறிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.