கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி மாநிலங்களவையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முடிவு செய்வதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னா் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னா் உடனடியாக 40-50 பாதுகாவலா்கள் வரவழைக்கப்பட்டனா். அவா்களில் பெண் பாதுகாவலா்களும் அடங்குவா். அந்தப் பாதுகாவலா்கள் அவையில் பாதுகாப்பு அரணை ஏற்படுத்தினா். வழக்கமாக அவையில் இடையூறு, வன்முறை ஏற்படும்போதுதான் பாதுகாவலா்கள் வரவழைக்கப்படுவா். ஆனால் அன்றைய தினம் காப்பீட்டு சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பாதுகாவலா்கள் வரவழைக்கப்பட்டனா். அவா்களின் பாதுகாப்புடன் அந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.