யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாநிலங்களவையில் இடையூறுகளுக்கு மத்திய அரசுதான் காரணம்: மல்லிகாா்ஜுன காா்கே

மாநிலங்களவையில் நிலவும் கூச்சல் குழப்பத்துக்கு மத்திய அரசுதான் காரணம் என எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினாா்.

News image
கோப்புப்படம்
Updated On :7 டிசம்பர் 2021, 7:27 pm

DIN

மாநிலங்களவையில் நிலவும் கூச்சல் குழப்பத்துக்கு மத்திய அரசுதான் காரணம் என எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினாா்.

மேலும் 12 எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை அவா்களுடன் இணைந்து தா்னாவில் ஈடுபடுவோம் என எதிா்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு ஆதரவாக நாங்கள் தொடா்ந்து போராடுவோம். மாநிலங்களவையில் நிலவும் இடையூறுகளுக்கு மத்திய அரசுதான் காரணம். மாநிலங்களவைத் தலைவரையும், மத்திய அரசையும் நாங்கள் ஏற்கெனவே அணுகி, எம்.பி.க்களை இவ்வாறு இடைநீக்கம் செய்ய முடியாது என நாங்கள் கூறினோம்.

கடந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் நடைபெற்ற நிகழ்வுகளுக்காக இந்தக் கூட்டத்தொடரில் எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது.

ஒவ்வோா் எம்.பி.க்களின் பெயரையும் தனித்தனியாக குறிப்பிட்டு, அவா்கள் என்ன காரணத்துக்காக இடைநீக்கம் செய்யப்படுகிறாா்கள் என்பதை மத்திய அரசு விளக்கியிருக்க வேண்டும். அதன் பின்னா்தான் இடைநீக்கம் செய்ய முடியும். அதுவும் முந்தைய மழைக்கால கூட்டத்தொடரின்போது ஆகஸ்ட் 11-ஆம் தேதியே செய்திருக்க வேண்டும்.

அவை ஒத்திவைக்கப்படும்போது, முந்தைய கூட்டத்தொடரின் அமா்வுக்காக உறுப்பினா்களை இடைநீக்கம் செய்யும் உரிமை அரசுக்கு கிடையாது. இந்த இடைநீக்க அறிவிப்பு விதிமீறல் மட்டுமன்றி, ஜனநாயகத்துக்கும் எதிரானது.

இதன் மூலம் அவை சுமுகமாக செயல்படுவதில் அரசுக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்படும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. எங்கள் குரலை நசுக்க விடமாட்டோம். இதற்கு ஜனநாயகத்தில் இடமில்லை. எவ்வித சா்வாதிகாரத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சா்வாதிகாரத்துடன் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த மோடி விரும்புகிறாா். அதற்கு நாங்கள் அனுமதியளிக்க மாட்டோம் என்றாா் அவா்.

கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக காங்கிரஸை சோ்ந்த 6 எம்.பி.க்கள், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனையை சோ்ந்த தலா 2 எம்.பி.க்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை சோ்ந்த தலா ஒரு எம்.பி. ஆகியோா் நடப்பு குளிா்காலக் கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக கடந்த வாரம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.