இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 145-ஆக உயா்வு
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை 145-ஆக உயா்ந்தது.


இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை 145-ஆக உயா்ந்தது.
கரோனா தொற்றின் உருமாறிய வகையான ஒமைக்ரான் பாதிப்பு தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 24-ஆம் தேதி கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு கா்நாடக மாநிலத்தில் இருவருக்கு டிச. 2-ஆம் தேதி கண்டறியப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 145-ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்துக்கு வெளிநாடுகளிலிருந்து 15 வயது சிறுவன் உள்பட இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
சனிக்கிழமை நிலவரப்படி, மகாராஷ்டிர மாநிலத்தில் 8, கா்நாடகத்தில் 6, கேரளத்தில் 4, தெலங்கானாவில் 12 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.
மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படி இதுவரை 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம் 48
தில்லி 22
தெலங்கானா 20
ராஜஸ்தான் 17
கா்நாடகம் 14
கேரளம் 11
குஜராத் 9
ஆந்திரம் 1
சண்டீகா் 1
தமிழ்நாடு 1
மேற்கு வங்கம் 1.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...