கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாட்டில் மொத்தம் 142.38 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

நாட்டில் இதுவரை மொத்தம் 142.38 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 டிசம்பர் 2021, 4:12 pm

DIN


நாட்டில் இதுவரை மொத்தம் 142.38 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி எண்ணிக்கைகள் குறித்து அமைச்சகம் தெரிவித்துள்ளது:

"திங்கள்கிழமை மட்டும் இரவு 7 மணி வரை 65,20,037 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இரவு வரை செலுத்தப்படவுள்ள தடுப்பூசிகளின் முழுமையான தரவுகள் கிடைக்கும்போது இந்த எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்கும். இதுவரை மொத்தம் 1,42,38,12,552 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 83,80,04,579. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 58,58,07,973."

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. முன்களப் பணியாளர்களுக்கு பிப்ரவரி 2-ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. அடுத்தகட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1-ம் தேதி முதலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1-ம் தேதி முதலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 15-18 வயதுடைய சிறார்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், இணை நோய் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முறையே ஜனவரி 3 மற்றும் 10 முதல் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.