உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதியில் திருடியதாகக் கூறி தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியைக் கொடூரமாகத் தாக்கியதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதியில் தலித் சிறுமியை ஒரு குடும்பம் கொடூரமாக தாக்கும் விடியோ இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அக்குடும்பத்தினர் திருட்டில் ஈடுபட்டதற்காக தண்டனை வழங்கப்பட்டது என தெரிவித்தனர்.
இந்நிலையில், இரண்டு ஆண்கள் அச்சிறுமியை தரையில் படுக்க வைத்து கால் பாதங்களில் கட்டையால் தாக்கும் விடியோவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவருடைய டிவிட்டர் பக்கதில் பகிர்ந்து ‘யோகி ஆதித்யநாத் சார், உத்தரப் பிரதேசத்தில் தினமும் தலித்களுக்கு எதிரான வன்முறையில் 34 பேர் பாதிக்கப்படுகிறார்கள். அடுத்த 24 மணி நேரத்தில் தாக்கியவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் காங்கிரஸ் கட்சி தூங்கிக் கொண்டிருக்கிற உங்கள் ஆட்சியை எழுப்பும்’ என தெரிவித்தார்.
அமேதி பகுதி காவல்துறை அதிகாரி அர்பித் கபூர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது போஸ்கோ மற்றும் எஸ்.சி , எஸ்.டி வன்கொடுமை சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
à¤à¤®à¥à¤ ॠमà¥à¤ दलित बà¤à¥à¤à¥ à¤à¥ निरà¥à¤®à¤®à¤¤à¤¾ सॠपà¥à¤à¤¨à¥ वालॠयॠà¤à¤à¤¨à¤¾ निà¤à¤¦à¤¨à¥à¤¯ हà¥à¥¤ @myogiadityanath à¤à¥ à¤à¤ªà¤à¥ राठमà¥à¤ हर रà¥à¤ दलितà¥à¤ à¤à¥ à¤à¤¿à¤²à¤¾à¤« à¤à¤¸à¤¤à¤¨ 34 à¤à¤ªà¤°à¤¾à¤§ à¤à¥ à¤à¤à¤¨à¤¾à¤à¤ हà¥à¤¤à¥ हà¥à¤, à¤à¤° 135 महिलाà¤à¤ à¤à¥ à¤à¤¼à¤¿à¤²à¤¾à¤«à¤¼, फिर à¤à¥ à¤à¤ªà¤à¥ à¤à¤¾à¤¨à¥à¤¨ वà¥à¤¯à¤µà¤¸à¥à¤¥à¤¾ सॠरहॠहà¥à¥¤â¦1/2 pic.twitter.com/mv1muAMxkr
â Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 29, 2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









