இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தலைமை கண்காணிப்புக் குழு ஆய்வு 

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மத்திய தலைமை கண்காணிப்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது 13 மதகுகளை இயக்கிப் பார்த்து ஆய்வு செய்தனர். 

News image
முல்லைப் பெரியாறு அணை
Updated On :19 பிப்ரவரி 2021, 7:06 am

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மத்திய தலைமை கண்காணிப்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது 13 மதகுகளை இயக்கிப் பார்த்து ஆய்வு செய்தனர். 

முல்லைப் பெரியாறு அணையில் பருவ காலநிலை மாறுபடும் போது, அணையின் உறுதித்தன்மை பற்றி ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, 3 பேர் கொண்ட மத்திய தலைமை கண்காணிப்புக் குழு மற்றும் துணைக்குழுவினர் ஆய்வு நடத்துவார்கள். இதன்படி,  முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, 13 மதகுகளை இயக்கியும் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை அணையில் ஆய்வுகள் நடத்த மத்திய தலைமை கண்காணிப்புக் குழுத் தலைவரும், மத்திய நீர்வள ஆதார தலைமைப் பொறியாளருமான குல்சன்ராஜ் தலைமையில் தமிழக அரசுத் தரப்பில் , காவேரியாறு தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசுத் தரப்பில் கேரளம் மாநில நீர்ப்பாசனத்துறை செயலாளர் டி.கே.ஜோஸ் ஆகியோர் வந்தனர்.

Story image

முல்லைப் பெரியாறு அணையில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்த வந்த மத்திய தலைமை கண்காணிப்புக் குழுவினர்.

இவர்களுடன் மத்திய கண்காணிப்பு துணைக் குழுத் தலைவர் சரவணகுமார், தமிழக பிரதிநிதிகள் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவிப் பொறியாளர் குமார், கேரளம் மாநில பிரதிநிதிகள் பிரசீத், உதவி பொறியாளர் சசி ஆகியோர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். 

இவர்கள் , பிரதான அணை, பேபி அணை, நீர்வழிப்போக்கிகள், சுரங்கப்பகுதி மற்றும் நீர்க்கசிவு அளக்கப்படும் கருவி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  ஆய்வின் போது 13 மதகுகளை இயக்கிப் பார்த்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.