மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இமாச்சலப் பிரதேச பட்ஜெட் கூட்டத்தொடர்: 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆளுநரை சட்டப்பேரவைக்குள் வரவிடாமல் தடுத்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News image
இமாச்சலில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
Updated On :26 பிப்ரவரி 2021, 10:16 am

DIN

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆளுநரை சட்டப்பேரவைக்குள் வரவிடாமல் தடுத்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயா உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அப்போது ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

இதனால் தனது சுருக்கமான உரையை முடித்துக் கொண்டு ஆளுநர் பண்டாரு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை வழிமறித்ததாக அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் புகார் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி, ஹர்ஷ் வர்தன் செளகான், சுந்தர் சிங் தாக்கூர், சத்பால் ரைசாதா மற்றும் வினய் குமார் உள்ளிட்ட 5 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதாக சபைத்தலைவர் விபின் பர்மர் அறிவித்தார். 

இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சபை நடவடிக்கைகளில் பங்குகொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேச பட்ஜெட் அமர்வு மார்ச் 20 அன்று நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.