இமாச்சலப் பிரதேச பட்ஜெட் கூட்டத்தொடர்: 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆளுநரை சட்டப்பேரவைக்குள் வரவிடாமல் தடுத்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆளுநரை சட்டப்பேரவைக்குள் வரவிடாமல் தடுத்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயா உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அப்போது ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் தனது சுருக்கமான உரையை முடித்துக் கொண்டு ஆளுநர் பண்டாரு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை வழிமறித்ததாக அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் புகார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி, ஹர்ஷ் வர்தன் செளகான், சுந்தர் சிங் தாக்கூர், சத்பால் ரைசாதா மற்றும் வினய் குமார் உள்ளிட்ட 5 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதாக சபைத்தலைவர் விபின் பர்மர் அறிவித்தார்.
இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சபை நடவடிக்கைகளில் பங்குகொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப்பிரதேச பட்ஜெட் அமர்வு மார்ச் 20 அன்று நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...