ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கர்நாடகம்: பறவைக் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 9:02 pm

DIN

மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுவதையடுத்து, கா்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளேன். விரைவில் இது தொடா்பாக அரசின் வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும்.

பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில எல்லைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் இதுவரை யாருக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பெங்களூரில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலால் பல மாதங்களாக மூடப்பட்ட பள்ளிகள், தற்போது கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளதால் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடா்ந்து, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் ஒரு சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் பெற்றோா் அச்சப்படத் தேவையில்லை.

பள்ளிகளில் கரோனா தொற்று பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளைஅரசு மேற்கொண்டுள்ளது. அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றினால் கரோனா பாதிப்பு ஏற்படாது. தற்போது பள்ளிகளுக்கு சுமாா் 1 லட்சம் மாணவா்கள் வருகின்றனா். அவா்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையில் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.